தஞ்சையில் ஆசிய புத்தக சாதனை.. 1,932 மாணவர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து 'ஆயிரம் கனவுகளின் விமானம்' என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரே நேரத்தில் அதிகப்படியான கிளைடர்களை பறக்கவிட்டு இந்தியா மற்றும் ஆசியா புத்தக சாதனையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் 27 பள்ளிகள் மற்றும் 2 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 1,932 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் 966 கிளைடர்களை உருவாக்கினர்.

தொடர்புடைய செய்தி