இதற்காக காலை எழுந்து தனது அண்ணன் முரளியுடன் இந்தளூர் பாலம் அருகில் உள்ள கல்லணை கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது குளித்துக் கொண்டிருக்கும் பொழுது நீரோட்டத்தின் வேகம் காரணமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். தனது தம்பியை காப்பாற்றும் முயற்சியில் அண்ணன் ஈடுபட்டும் அவரால் காப்பாற்ற முடியவில்லை.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவனின் உயிரற்ற சடலத்தை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். காதணி விழா நடைபெற இருந்த நிலையில் மாணவன் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.