அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து வெடித்தது. இதில் அவருடைய உடலில் தீப்பற்றி எரிந்தது. உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அவர் அலறிதுடித்துள்ளார்.அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக பற்றி எரிந்த தீயை அணைத்து உயிருக்கு போராடிய கீர்த்திகாவை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த கீர்த்திகா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்.. வெளியான முக்கிய அறிவிப்பு