வழக்கு விசாரணைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 30ம் தேதி அறநிலையத்துறை தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி அறநிலையத்துறை தஞ்சை உதவி கமிஷனர் ஹம்சன், ஆலய நிலங்கள் தாசில்தார் பார்த்தசாரதி, கோவில் தக்கார் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, தஞ்சை அறநிலையத்துறை ஆய்வாளர் பாபு, புதுப்பட்டினம் விஏஓ மற்றும் தெற்கு போலீசார் முன்னிலையில் வீடுகள் இடிக்கப்பட்டு இடம் மீட்கப்பட்டு கோயில் செயலாளர் அய்யம்மாள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தில் பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டது. இந்த இடத்தின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு