தஞ்சாவூர்: கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தஞ்சாவூர் அருகே கடகடப்பை ஊராட்சியில் கோமாரி நோய்க்கான இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கோமாரி நோய் ஒரு நச்சுயிரியால் ஏற்படுகிறது. இது கால்நடை வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோயாகும். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மேற்பார்வையில் ஏழாவது சுற்றாக கோமாரி தடுப்பூசி கால்நடைகளுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. நான்கு மாத வயதிற்கு மேல் உள்ள அனைத்து பசு மற்றும் எருமை இன மாடுகளுக்கு தடுப்பூசி முகாம் ஜூலை 2ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை இலவசமாக செலுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் தஞ்சை அருகே கடகடப்பை ஊராட்சியில் கால்நடை மருத்துவர் காவ்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர். இதில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து வரக்கூடிய நாட்களில் கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு செலுத்தப்பட உள்ளதால் கால்நடை வைத்துள்ள விவசாயிகள் உரிமையாளர்கள் தடுப்பூசியை தங்களது கால்நடைகளுக்கு செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி