தஞ்சாவூரில் 4 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அய்யனாபுரம் வரை இயக்கப்பட்ட பேருந்தை காங்கேயம்பட்டி வரை தட நீட்டிப்பு, தஞ்சாவூர்- சில்லத்தூர், தஞ்சாவூர்-பாபநாசம், தஞ்சாவூர்- குருவாடிப்பட்டி ஆகிய வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரளி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி. கே. ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்) உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

தஞ்சாவூர் கோட்டாட்சியர் செ. இலக்கியா, மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் பொது மேலாளர் ஸ்ரீதரன், துணை மேலாளர் (வணிகம்) தமிழ்ச்செல்வன், தொ. மு. ச. பொதுச் செயலர் சு. பாண்டியன், ஏ. ஐ. டி. யூ. சி போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி