கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் உறங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தாயார் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமி தனது பெரியப்பா உடன் நோயாளிகளின் ஆண் உறவினர்களுக்கான ஓய்வறையில் படுத்து உறங்கியுள்ளார்.
இரவில் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற தினேஷை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி