இது குறித்து பொதுமக்கள் பலமுறை தஞ்சாவூர் மாநகராட்சியில் கோரிக்கை வைத்தும் இதுவரை சீர் செய்யப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் அந்த வழியாக சாலையை கடக்கும் போது பாதாள சாக்கடை குழிக்குள் விழும் ஆபத்து உள்ளது. மேலும் அக்குழியில் கழிவு நீர் உள்ளதால் விஷவாயு தாக்கி இறப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து 3 தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர். அதில், ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று நிகழாமல் மக்களின் உயிர்காக்க உடனடியாக இப்பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என இப்பகுதி வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி