தஞ்சையில் 21.5 கிலோ கஞ்சா பறிமுதல்.. பிரபல ரவுடி கைது

தஞ்சாவூர் குட்ஷெட் ரோடு பகுதியில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் 21.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த அண்ணாநகரைச் சேர்ந்த 'வெடி' கோபி (37) என்பவர் கைது செய்யப்பட்டார். கைதான கோபி மீது ஏற்கனவே 31 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ₹2.15 லட்சம். போலீஸார் அவரைக் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி