பேராவூரணி அருகே விபத்தில் வாலிபர் பலி

பேராவூரணி அருகே பூக்கொல்லையைச் சேர்ந்த ராஜ்மோகன் (39) என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு தனது சகோதரியின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காலகம் - ஆவுடையார்கோவில் சாலையில் நெல் மூட்டைகளுடன் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி