தஞ்சை: இருசக்கர வாகனம் - சரக்கு லாரி மோதல்.. இளைஞா் உயிரிழப்பு

சேதுபாவாசத்திரம் அருகே சின்ன ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த சுந்தர வடிவேல் (24) என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கௌசல்யா அளித்த புகாரின்பேரில், சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி