ஆனால் பணம் ஒப்படைத்தும் இதுவரை எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்கவில்லை என்பதால், அந்த திட்டத்தை தஞ்சாவூர் மாநகராட்சி ரத்து செய்தது. ஆனால் ரத்து செய்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒதுக்கப்பட்ட நிதியை இந்திய தொல்லியல் துறை மீண்டும் ஒப்படைக்கவில்லை. இந்நிலையில் ரூ 4 கோடி 80 லட்சம் தொகையை வட்டியுடன் ஒப்படைக்குமாறு தஞ்சாவூர் மாநகராட்சி இந்திய தொல்லியல் துறையை கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. பல்வேறு பணிகளுக்கு நிதி கிடைக்காமல் கிடப்பில் உள்ள நிலையில் இந்திய தொல்லியல் துறைக்கு நிதி ஒதுக்கியும் பணிகள் மேற்கொள்ளாதது தஞ்சாவூர் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் தொடரும் ராஜினாமா.. இடைத்தேர்தலை சந்திக்க தவெக திட்டம்