இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தார். அவரது சடலம் உடற்கூறாய்வு முடிந்து இன்று சொந்த ஊர் கொண்டு வரப்படும் வழியில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் ரமேஷ் உடல் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து நிறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரமேசின் மனைவி, மூன்று பெண் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்.
உரிய நிவாரணம், ரமேஷின் மனைவிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமார் 2 மணி நேர சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது