பட்டுக்கோட்டை, கரம்பயம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை

பட்டுக்கோட்டை வட்டம் கரம்பயம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளுக்காக கரம்பயம், ஆலத்தூர், பாப்பாநாடு கிராமங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர் மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய 94987-94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். மனோகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி