அதன்படி வரும் ஜூன் மாதத்திற்கான பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை 14.06.2025 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.