சித்திரை மாதம் முதல் நாளில் விவசாயிகள் மாடுகளை நீராட்டி சந்தனம், பொட்டு வைத்து, வயலில் கணபதி பூஜை, வருண பூஜை, சூரிய நாராயண பூஜை ஆகியவை நடத்தப்பட்டன. அப்போது உழவு செய்ய வேண்டிய இடத்தில் இயற்கையான உரங்களை தெளித்தும், நவதானியங்களை தூவியும், பின்னர் ஏர்க்கலப்பையில் மாட்டைப் பூட்டி விவசாயிகள் உழவு செய்தனர். நல்லேர் எனும் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அந்த ஆண்டு விவசாயம் செழித்து வளம் கொழிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மாவடுகுறிச்சி கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
வங்கிப் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவு