இந்தக் கூட்டமைப்பு சார்பில் நகர்ப்பகுதியில் உள்ள மதுக்கடைகளை அப்புறப்படுத்த பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி மதுக்கடை இல்லாத நகராக மாற்றியது. தற்போழுது மீண்டும் மாற்று வடிவில் மதுக்கடையை பேராவூரணி நகர்ப்பகுதிக்குள் நிறுவ பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிகிறோம். ஃபாரின் லிக்கர் (F. L-2) என்ற பெயரில் பார் வசதியுடன் உயர்தரத் தனியார் மதுக்கடையை மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தொடங்குவதற்கு, பணம் படைத்த ஒரு சிலர் முயற்சிப்பதாக அதிர்ச்சி தரும் செய்திகள் பரவுகிறது. ஏதேனும் ஒரு வடிவில் பேராவூரணியின் பெருமையை சிதைக்கும் வகையில் அமைக்கப்படும் மதுக்கடைகளை ஒருக்காலும் அனுமதிக்க கூடாது என்று தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்.. வெளியான முக்கிய அறிவிப்பு