அதன்படி தொழிலாளியின் பங்காக ரூ. 20-ம், நிறுவனத்தின் பங்காக ரூ. 40-ம் சேர்த்து மொத்தம் ரூ. 60 செலுத்த வேண்டும். நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியினை செலுத்துவதற்கு வசதியாக web-portal lwmis. lwb. tn. gov. in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலையளிப்போர் தங்கள் நிறுவனங்களை இணைய வழியாக பதிவு செய்து தொழிலாளர் நல செலுத்தி நிதியை செலுத்தி ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதனை செலுத்தும் போது 2024-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நலநிதி, கொடுபடாத்தொகை போன்றவற்றை இணையவழியாக செலுத்தலாம். வாரியத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்களும் web-portal-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுவரை தொழிலாளர் நலநிதி செலுத்தாதவர்கள் நிறுவனம் தொடங்கிய ஆண்டில் இருந்து செலுத்தவேண்டும். நிலுவைத்தொகை செலுத்துவதற்கான வசதியும் web-portal-ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது