துபையில் மாரடைப்பால் உயிரிழந்த பேராவூரணி அருகே உள்ள உடையநாடு கிராமத்தைச் சேர்ந்த நூ. ஹபிபுல்லா (50) என்பவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ நடவடிக்கை எடுத்தார். பிப். 6-ஆம் தேதி உயிரிழந்த ஹபிபுல்லாவின் உடல், துரை வைகோவின் முயற்சியால் பிப். 8-ஆம் தேதி இரவு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, திங்கள்கிழமை காலை அடக்கம் செய்யப்பட்டது. உடலைக் கொண்டுவர உதவிய துரைவைகோவுக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.