தஞ்சை: மார்ச் 13, 18, 25 ஆம் தேதிகளில் மாற்றுத்திறனாளிகள் முகாம்

இதுநாள்வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 13.03.2025 வியாழக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், 18.03.2025 செவ்வாய்க்கிழமை கும்பகோணம் பேருந்து நிலையம் அருகில் உள்ள KMSS வளாகத்திலும், 25.03.2025 செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள கிராம சேவை கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது. 

இம்முகாமில் எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, மன நலம் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்றிதழ் வழங்குவார்கள். இச்சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்களுடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். இதுவரை தனித்துவமான அடையாள அட்டைக்கு (UDID) விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி