போட்டியை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார் (பேராவூரணி), துரை. சந்திரசேகரன் (திருவையாறு), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடு மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு மொத்தம் சுமார் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. எல்கையை நோக்கிச் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டி, குதிரை வண்டிப் பந்தயத்தை, சாலையின் இருபுறமும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.