போட்டிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் கொடியசைத்து துவக்கிவைத்தார். பின்னர் வெற்றிபெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் ஏராளமான பந்தய ரசிகர்கள் காத்திருந்து கண்டு ரசித்தனர். வெற்றிபெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும், கொடிப்பரிசாகவும் மொத்தம் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாட்டுவண்டிகளின் சாரதிக்கு செல்போன்கள் பரிசு வழங்கப்பட்டது. பந்தய விழாவில், அதிமுக நகரச் செயலாளர் எம். எஸ். நீலகண்டன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ. அப்துல்மஜீத், பேரூராட்சி கவுன்சிலர்கள் வீ. ப. நீலகண்டன், மணிமாலா நீலகண்டன், ரேக்ளா சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்