தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தில் நடைபெற்ற பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ச. மாலதி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கருத்துக்களை எடுத்துக் கூறினார். பயிற்சியில் கலந்து கொண்ட வேளாண்மை உதவி அலுவலர்கள் இலை வண்ண அட்டை கொண்டும், நெல் சாகுபடி குறித்து துண்டு பிரசுரங்களை கொண்டும், நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளிடம் தெளிவாக எடுத்துக் கூறினர். பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ச. சன்மதி மற்றும் வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கர்நாடகாவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு