தஞ்சை மாவட்டத்தில் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் டிரைவர் வேலை செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்களை நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தஞ்சை மாவட்டத்தில் நாளை முதல் 13 நாட்கள் நடக்கிறது. தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - தஞ்சை மாவட்ட கலெக்டரின் உத்தரவிற்கிணங்க மாவட்டம் முழுவதும் கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் டிரைவர் வேலை செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்களை இனங்கண்டு, நல வாரியங்களில் பதிவு செய்வதற்காக சிறப்பு பதிவு முகாம்கள் நடத்தப்படுகின்றன. 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இந்த முகாம்கள் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஜனவரி மாதம் 11-ந்தேதி (சனிக்கிழமை) வரை 13 நாட்கள் 26 முகாம்கள் நடைபெறுகிறது. முகாம்களில் பதிவு செய்வதற்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட செல்போன் எண், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வயதிற்கான ஆவணம் (பள்ளி சான்று, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை), தேசிய மாயக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் விவரம், பணிச் சான்று ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம். நல வாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்கள் அரசு நலத்திட்டங்களை பெற்று பயன்பெற இயலும்.

தொடர்புடைய செய்தி