மதுக்கூர் கல்யாண ஓடை வாய்க்காலை தூர்வார கோரிக்கை

மதுக்கூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயத்திற்கும், நிலத்தடி நீர்மட்டத்திற்கும் கல்யாண ஓடை வாய்க்கால் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்ததும் கல்லணையை வந்தடைந்த தண்ணீர் தஞ்சை அருகே சூரக்கோட்டை பகுதியில் இருந்து கல்யாண ஓடை கிளை வாய்க்காலாக பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளையும் தாண்டி மதுக்கூர் பகுதிகளிலும் பல ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. 

வாய்க்காலில் வரும் தண்ணீர் சிறிய மதகுகளின் வாயிலாக குளங்களுக்கும், ஏரிகளுக்கும் சென்று நிரம்புகிறது. ஆனால் தற்போது செடி, கொடிகள் முளைத்து கழிவுநீர் கலந்து குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், அனைத்தும் கல்யாண ஓடை வாய்க்காலில் கிடப்பதால் மேட்டூர் அணை திறந்தாலும் ஒரு வாரகாலத்திற்குள் அந்த தண்ணீர் கல்யாண ஓடை வாய்க்காலில் வந்து வயல்களுக்கு பாயுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மதுக்கூர் கல்யாண ஓடை கிளை வாய்க்காலை சுத்தப்படுத்தி தண்ணீர் ஓடுவதற்கான பாதையை சரிசெய்து தரவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி