பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அந்த சாலை வழியாகத்தான் வாகனங்களும் வர வேண்டியுள்ளது. மேலும் ஒருவழி பாதையின் தொடக்கமும், இரண்டு அரசு போக்குவரத்து கழக டெப்போக்களுக்கு பேருந்துகள் செல்லக்கூடிய பாதையும் திருமண மண்டபம், தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரக்கூடிய ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில்தான் வரவேண்டும். ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதி இந்த சாலையில் உள்ளதால் வாகனங்களும் பொதுமக்களும் வரும்போது விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே ரயில்வே ஸ்டேஷன் முன்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையில் வேகத்தடை அமைத்துத் தர வேண்டும் என்று ரயில் உபயோகிப்போர் நல சங்கத் தலைவர் விவேகானந்தம், செயலாளர் முகேஷ், பொருளாளர் வைத்தியநாதன் மற்றும் பொறுப்பாளர்கள், வர்த்தக சங்க பிரமுகர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.