பட்டுக்கோட்டை: தோட்டக்கலைத்துறை தென்னை தொழில் நுட்ப பயிற்சி

பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தஞ்சாவூர் தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் தலைமையில் தென்னை தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் குமணன், தஞ்சை தோட்டக்கலை உதவி இயக்குனர் (நடவு பொருள்) கனிமொழி, பட்டுக்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குனர் ராகினி ஆகியோர் கலந்துகொண்டனர். 

இப்பயிற்சியில் தென்னை நாற்றங்கால் உற்பத்தி, தாய்மரத் தேர்வு, நடவு முறை, மண் மேலாண்மை, நோய், பூச்சி மேலாண்மை பற்றி வேளாண் விஞ்ஞானிகள் மூலம் விளக்கிக் கூறப்பட்டது. தென்னையில் ஒருங்கிணைந்த முறையில் உரமிடும் முறை பற்றியும், தென்னையில் நோய் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தும் முறைப் பற்றியும் வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் (நோயியல் துறை) சுருளிராஜன், இணை பேராசிரியர் (பூச்சியியல் துறை) முத்துக்குமரன் ஆகியோரால் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சியில் 150-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி