ஐந்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மட்டும் அந்த வழியாக சென்று தனியாருக்கு சொந்தமான கார்களில் ஆட்களை ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்றனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஸ்ட்ரெச்சர், வீல் சேர் போதுமான அளவில் இல்லாததும் அதை இயக்குவதற்கான உதவியாளர்கள் இல்லாததாலும் பொதுமக்களே காயம்பட்ட ஒவ்வொருவரையும் கைகளில் தூக்கி சென்றனர். 35 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு போதிய படுக்கை வசதி இல்லாமல் சிரமப்பட்டனர். இதில் மாரியம்மாள் (வயது 55) மற்றும் சுமதி (வயது 35) இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்