தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி உடையார் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், பாடப்புத்தகத்தில் படித்த புனித ஜார்ஜ் கோட்டையை நேரில் காணும் ஆவலில் சென்னை சட்டமன்றக் கூட்டத்தொடரை பார்வையிட்டனர். பள்ளித் தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் ஏற்பாட்டில் 16 மாணவர்கள் ஆசிரியர்களுடன் சென்று சட்டசபை நிகழ்வுகளையும், எழும்பூர் அருங்காட்சியகத்தையும் கண்டு களித்தனர்.