தம்பிக்கோட்டை வடகாடு பள்ளியில் கல்வித் துறை அமைச்சர் ஆய்வு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது பள்ளியில் கட்டப்படும் புதிய வகுப்பறைகளை பார்வையிட்டும், மாணவர்களின் கற்றல் திறன் அறிய அவர்களிடம் கேள்வி கேட்டு ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும், அதில் பிரதான கோரிக்கையான ஆய்வகம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார். நிகழ்வில் முரசொலி எம்பி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி