கும்பகோணம் மாநகராட்சியில், திமுக கட்சிக்கு 38 கவுன்சிலர்கள் இருந்தும், காங்கிரஸ் கவுன்சிலர் சரவணன் மேயராக உள்ளார். அவர் வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், அதிகாரிகளை தன்னிச்சையாக இயக்குவதாகவும் திமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு காங்கிரஸ் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக, கும்பகோணம் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள், காங்கிரஸ் மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.