இதேபோல் பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் நசீர் தலைமையில், உதவி ஆய்வாளர் சேதுராமன் கொண்ட தனிப்படையினர் புகையிலை பொருட்கள் தொடர்பாக வாகன சோதனயில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த கார் அருகே நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் பெயர் ஹரிஷ் ராஜ் ரோஹித் என்பதும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காரில் தமிழ்நாடு நம்பர் பிளேட் பொருத்தி பெங்களூரில் இருந்து 600 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை கரிக்காடு குடோனில் இறக்கி வைத்துவிட்டு நிற்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவான குடோன் உரிமையாளர் ஜெயகுமாரை தேடி வருகின்றனர்.