அப்போது ஜீப்பில் இருந்த அரசு அதிகாரிகள் நூலிழையில் உயிர் தப்பினார்கள். பின்னர் அந்த வாகனத்தை பிடிக்க முயன்றபோது சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தை நிறுத்தாமலும், வட்டாட்சியர் வாகனத்தை இடிக்கும் வகையில் அச்சுறுத்தியும் இருசக்கர வாகனம் மூலம் வட்டாட்சியர் வாகனத்தினை முன்னேற விடாமல் இருவர் தடுத்துள்ளனர்.
பின்னர் அந்த லாரியை சுமார் ஒரு மணி நேரம் போராடி குளிச்சப்பட்டு என்ற இடத்தில் நிறுத்த முயன்றபோது லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் மணல் லாரியை கைப்பற்றி அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.