இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர் கூறியதையடுத்து, அவர்கள் அந்த ரயிலில் இருந்து இறங்கினர். அப்போது, அவர்கள் கொண்டு வந்த பையை தவறுதலாக அந்த ரயிலிலேயே விட்டுவிட்டது தெரியவந்தது. இதுபற்றி சக்தி கணபதி கும்பகோணம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த போலீசாரிடம் பையை தவறவிட்டதாகவும், அதில் சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புடைய 33 கிராம் நகை இருந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, பாபநாசம் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ரயில் பாபநாசம் வந்ததும் பை மீட்கப்பட்டு, சக்தி கணபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?