தஞ்சாவூரில் நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூரில் நேற்று கலைமாமணி கவிஞர் வீரசங்கரின் "நாட்டுப்புறப் பாட்டுக்களஞ்சியம்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டிகேஜி. நீலமேகம், புலவர் முத்துவாவாசி, தஞ்சாவூர் மாநகர மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தமிழரசி பதிப்பக உரிமையாளர் முனைவர் செந்தில்குமார், முனைவர் உஷா செந்தில்குமார் தம்பதியர் விழா ஏற்பாடுகளைச் செய்தனர்.

தொடர்புடைய செய்தி