தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தனியார் கிளினிக்கில் பணிபுரியும் செல்வி(35) என்பவர் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ஒரத்தநாடு போலீசார் நடத்திய விசாரணையில், திருட முயன்றது அப்துல்கனி(31) என்பது தெரியவந்தது. செல்வி அளித்த புகாரின் பேரில், அப்துல்கனியை போலீசார் கைது செய்தனர்.