வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் வேளாண் பணிகளை காலம் தவறாமல் விவசாயிகள் செய்து வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி பகுதியில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் களை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். களை எடுத்த வயல்களில் உரமிடும் பணிகளிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111 அடியாக உயர்ந்துள்ள நிலையில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கால்வாய் பாசன விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல்லை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது