தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்ற பகுதிகளை விட ஒரத்தநாடு பகுதியில் வன்கொடுமை கூடுதலாக இருப்பது ஆய்வில் தெரிய வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், காவல் துறைக் கண்காணிப்பாளரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.வன்கொடுமை வழக்குகளில் தீவிரமாக ஆராய்ந்தால்தான் உண்மை நிலை தெரிய வரும். சில வழக்குகள் அரசு அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டு வராமல், அவர்களுக்குள் முடித்துக் கொள்ளப்படுகிறது. எனவே, வன்கொடுமைகள் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே நிகழ்கின்றன. அதை அரசு அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். சாதி வன்கொடுமை வழக்குகளில் அலுவலர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்து முடிக்காமல், சட்டப்படி செய்து முடிக்க வேண்டும். இந்த வழக்குகளில் கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்டப்படி குற்றம்" என்றார் தமிழ்வாணன்.
கீழே விழுந்து நொறுங்கிய விமானம் - 5 விளையாட்டு வீரர்கள் பலி!