தஞ்சை: பட்டுக்கோட்டையில் 123 கிலோ குட்கா பறிமுதல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாய்நகரை சேர்ந்தவர் டெல்பின் ரமேஷ் (வயது 40). இவர் பட்டுக்கோட்டை தங்கவேல் நகர் 2-வது தெருவில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் காபித்தூள் வியாபாரம் செய்வதாக கூறி வாடகைக்கு அறை எடுத்து தடை செய்யப்பட்ட குட்கா வியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இது பற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனவேந்தன் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் டெல்பின் ரமேஷ் வாடகைக்கு எடுத்திருந்த கட்டிடத்தில் சோதனையிட்டனர். சோதனையில் போலீசார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 123 கிலோ குட்காவை பறிமுதல் செய்து டெல்பின் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி