இதற்காக ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. போலீஸ் வேன்கள், ஜீப்புகள், கலவர பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க பயன்படுத்தப்படும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இதை தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல்ஹக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாகனங்களின் ஆவணங்களையும் அவர் சரிபார்த்தார்.
அப்போது அந்த வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்றும், எரிபொருள் சரியாக பயன்படுத்துகிறார்களா எனவும், வாகனங்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து போலீசாரின் கவசங்களையும் உடைமைகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.