பெரும்பாலான வயல்களில் அறுவடை பணிகள் முடிவடைந்து தரிசாக இருப்பதால், இப்பகுதியில் ஆயிரக்கணக்கான வாத்துகள் மேய விடப்பட்டுள்ளன. வாத்துகளுக்கு ஒரே இடத்தில் வைத்து தீவனம் வைப்பது பெரிய அளவில் செலவை ஏற்படுத்தும் என்பதால் அறுவடை முடிந்த வயலில் வாத்துகளை மேய்ச்சலுக்காக விடுகின்றனர். இதனால் வயல்களுக்கு இயற்கை உரம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வாத்துகளின் எச்சம் நல்ல உரமாக அமையும் என்பதால் குடும்பம் குடும்பமாக தங்கியிருந்து வாத்துகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.
மேலும் இவர்களிடம் வாத்து முட்டைகளை வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். அதேபோல் கடைகளுக்கும் சென்று வாத்து முட்டைகளை விற்பனை செய்கின்றனர். ஆந்திரா போன்ற பகுதிகளில் வாத்துகள் இறைச்சிக்காக வாங்கிச் செல்லப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் நிறைய இடங்களில் வாத்துகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளன.