தஞ்சை அருகே ரயில் தண்டவாளத்தில் மூதாட்டி பிணம்

தஞ்சாவூர் - ஆலக்குடி ரயில்வே தண்டவாளப் பகுதியில் இன்று (டிசம்பர் 2) 70 வயது மூதாட்டி ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், ரயில்வே இருப்புப் பாதை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த மூதாட்டி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி