ஒரத்தநாடு அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகளுக்கு 800, கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு 93, வேளாண் கல்லூரிக்கு 165 என மொத்தம் 1058 மடிக்கணினிகள் தஞ்சை எம்பி எஸ். முரசொலி முன்னிலையில் வழங்கப்பட்டன. திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகா், முன்னாள் எம்எல்ஏ கே. டி. மகேஸ் கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் கோ. வாசுகி வரவேற்றாா்.