கடந்த 6ஆம் தேதி மாலை திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் காலை கட்டுத்தேர் திருத்தேரோட்டமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், காவிரி பகவத் படித்துறையில் வைகாசி விசாக தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரஞ்சிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?