தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி பெருமளவு மேற்கொள்ளப்பட்டுள்ளதால், மும்முனை மின்சாரம் 16 மணி நேரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணியை உடன் தொடங்கி தண்ணீர் வருவதற்குள் முடிக்க வேண்டும். மானாவாரி பகுதிகளில் நிலக்கடலை அறுவடை நடைபெற்று வருகிறது. 80 கிலோ கொண்ட கடலை தனியார் வியாபாரிகள் ரூ. 7,500-க்கு கொள்முதல் செய்கின்றனர். உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், இந்த விலை போதாது. எனவே, கடலையை அரசே ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கோரிக்கைகள் அனைத்தும் ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என கோட்டாட்சியர் உறுதியளித்தார்.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்