இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், 100 நாள் வேலை போன்ற அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தால் விவசாய பணிகளை மேற்கொள்ள யாரும் முன் வருவதில்லை. அது மட்டுமல்லாமல் விவசாய பணிகளை மேற்கொள்ள ஆட்கள் வருவது கிடையாது. எல்லோரும் விவசாயமில்லாத மாத சம்பள வேலைகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கூலி ஆட்களை கொண்டு நடவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது நேர விரையமும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது. இதனால் மாற்று ஏற்பாடாக எந்திரங்களை கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. எந்திரங்கள் மூலம் நடவு பணிகளை செய்யும் போது நேரம் மிச்சமாவதுடன் குறைந்த எண்ணிக் கையிலான ஆட்களை கொண்டு நடவு பணிகளை முடிக்க முடிகிறது. எனவே அரசு மானிய விலையில் அதிகஎண்ணிக் கையிலான நடவு எந்திரங்கள் மற்றும் விவசாய கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு