ஒரத்தநாடு, அம்மாபேட்டை பகுதிகளில் அறுவடை பணிகளில் நடைபெற்று வருவதில், மழை, வெள்ளம் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் காப்பீடு மாதிரி அறுவடையை உடன் செய்து இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூதலூர் தாலுகா வெண்டையம்பட்டி ஊராட்சி வேலுப்பட்டி கிராமத்தில் நீண்ட நெடுங்காலமாக மின்கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் சென்று உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும். ஒரத்தநாடு தாலுகா பஞ்சநதிக்கோட்டை, காசாவளநாடு, கோவிலூர், ஆழிவாய்க்கால், நெல்லுப்பட்டு, சேதுராயன்குடிக்காடு, ஈச்சங்கோட்டை பகுதிகளில் அருள்மிகு கெம்புகேசவர் திருக்கோவில் நிலத்திற்கு சொந்தமான இடத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருபவர்களை வெளியேற்றும் முயற்சி நடைபெறுகிறது. எனவே, விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
கதறி அழுத மகளின் வாயை மூடிய தந்தை.. மூச்சுத்திணறி பலி