இதற்கு மாற்றாக 175 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க மார்க்சியத்தை நாம் ஏற்றுக் கொண்டு, இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே மாற்றத்திற்கு உள்ளாக்க வேண்டும்.
மத்தியில் ஆண்டு கொண்டிருக்கின்ற பாஜக நாட்டின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது, ஏழை எளிய மக்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன, மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, மக்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை, வேலைக்கு கூலி கிடைப்பதில்லை இந்த நிலைமைகளை நாம் மாற்ற வேண்டும். கம்யூனிஸ்ட்
கட்சியின் நூற்றாண்டு விழாவில் உறுதி ஏற்கவேண்டும் என்றார். நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, ஒன்றிய செயலாளர் கோசிமின், மாவட்ட துணைச் செய லாளர் கோ. சக்திவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.