காவிரியின் குறுக்கே தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தான் என் ஒரே குறிக்கோள் என கர்நாடக துணை முதல்-மந்திரி டி. கே. சிவக்குமார் உறுதியாக கூறி வருகிறார். அவர் வருகிற 22-ந்தேதி தமிழகத்திற்கு வருகை தந்து முதல்-அமைச்சரை சந்தித்து தொகுதி வரைமுறை எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அவர் வருகையை கண்டித்து விவசாய சங்கங்கள் போராட்டத்தை கையில் எடுக்கவேண்டும். பா. ஜனதா கட்சி சார்பில் டி. கே. சிவக்குமார் உருவப் பொம்மை எரிப்பு, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என டெல்டா பகுதி முழுவதும் நடத்தப்படும். தி. மு. க. கூட்டணியில் உள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளும் போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி