அதன் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை ஏராளமான பெண்கள் வருவாய் கோட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் உதவி ஆட்சியர் ஹிருத்யா எஸ் விஜயன் தலைமையில், கோட்ட உதவி கண்காணிப்பாளர் அங்கித் சிங் முன்னிலையில் கோட்டாட்சியரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் டாஸ்மாக் மேலாளர் தமிழ்மணி, வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது 3 மதுக்கடைகளையும் 2 மாதங்களுக்குள் அகற்றிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!